இடுகைகள்

கொலுவோடு கொண்டாடு

படம்
      கொலு என்றால் சின்னவயதில் கிராமத்தில் இரண்டே இரண்டு வீடுகளில் மட்டும் வைக்கப்பட்டிருக்கும் 9 படிகள்கொண்ட பிரம்மாண்டம்தான் ஞாபகம் வருகிறது. 9 நாட்களிலும் தவறாது நண்பர்கள் சகிதம் ஆஜராகிவிடுவேன். பெரியவர்கள் இரண்டு பக்திப்பாடலகளைப் பாடிமுடித்தபிறகு சிறுமியர்களின் நடனம் ஆரம்பமாகும். வெறுமே கைகொட்டியும் பின்பு கோலாட்டோடும் பாடப்படுகிற கதையோடு நகைச்சுவை கலந்த பாடல்கள் இப்போதும் ஊர்த்தெருக்களில் கற்றி அலையக்கூடும். இதில் பாடப்படுகிற பல பாடல்களை பள்ளிகளில் பாடி கேலி செய்து, சம்பத்தப்பட்ட சிறுமியிடம் திட்டு வாங்குவதும், பின்பு மாலையில் கொலுவைக்கும் வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லப்பட்டு மிரட்டவும் படுவோம். ‘கிண்டல் பண்ணீங்கண்ணா இனிமே இங்க வரக்கூடாது’. இழக்கவே முடியாத கொலுவிற்காக, எல்லோர் முன்பும் கிண்டல் செய்துவிட்டு தனிமையில் அவர்களிடம் மன்னிப்புக்கேட்ட கதைகள் ஒரு தனி அத்தியாயம். அந்த 9 நாட்களிலும் அவர்கள்தான் ஹீரோக்கள், மாலை 5 மணிக்கே கொலுவைத்திருக்கிற வீட்டின் வாசலில்கூடிவிடுவோம். வீட்டுமுற்றத்தில் ஏதாவது விளையாடுவதும் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுமாக இருப்போம், அது வீட்டிலுள்ளவர்கள

சுவரோடு ஒட்டிய சென்னை

படம்
சென்னையையும் சுவரொட்டியையும் நீங்கள் பிரித்துப்பார்க்க நினைத்தால் அது மிகச்சிரமமான காரியம்தான். சென்னைச் சுவர்களோடு பிரிக்கமுடியாத பந்தம் கொண்டிருப்பவை ஏசியன், நெரோலாக், பெர்ஜெர்களைவிடவும் இந்த சுவரொட்டிகள்தான். கொஞ்சநாட்களுக்கு முன்னதாக ஒரு சினிமா விளம்பரம் உங்களுக்கு 21 கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்   என்று கேட்டுக் கடுப்படித்தது. இப்படிப் பொத்தாம் பொதுவாக ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தி அப்புறம் சப் ’ பென்று முடிப்பது ஒரு விளம்பர உத்தி. புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா, சண்டேண்ணா ரெண்டு என்று அவ்வப்போது பொதுப்பார்வையை தங்கள் பக்கம் திருப்பி பலனடைந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் தொலைகாட்சித் தொடர்களுக்கும் அதுமாதிரி ஒரு திடீர் திருப்ப ’ விளம்பரங்களை சுவரொட்டிகள் மூலம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியதில் சரவணன் மீனாட்சிக்கு பெரும் பங்கு உண்டு. என் நண்பனின் 8 வயது மகள் சரவணன்மீனாட்சி திருமணம் ஒளிபரப்பான அன்று 11 மணிவரை விழித்திருந்து பார்த்துவிட்டு அயர்ச்சியாய் சொன்ன வார்த்தை “ நல்லவேளைப்பா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது, இனிமே பிரச்சினை இல்ல ”   தமிழகத்தின் பெரும்பாலான மனிதர்கூடுமிடங்களிலெல்

கொஞ்சம் கவனமாய்த்தான் வாழவேண்டியிருக்கிறது, வாழ்க்கையை!

படம்
 அவரோடு பேசிக்கொண்டிருந்ததை இவர் பார்த்தபிறகு       அவ்வளவாய்ப் பேசுவதில்லை இவர் என்னோடு,         இதுவரை விலகியே இருந்த மற்றொருவர் இப்போது            என் நெருக்கமான நண்பர், மற்றவர் நெருங்கியது               தெரிந்ததும், அவர் கொஞ்சமாய் விலகிப்போனார்.                அவர் விலகியதை அறிந்து இவர் மீண்டும்                 பேசத்துவங்கினார். பிறிதொருவர் இப்போது அவருக்கு           நண்பரானார், இவரும் மற்றவரும் பேசிக்கொள்ளத்        துவங்கிய நாளிலிருந்து, நான் இருவரோடும்                   இப்பொது பேசுவதில்லை .

மனிதனை நோக்கிய மனுஷ்ய’னின் கேள்வி. நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?

படம்
      மனுஷ்யபுத்திரன், ஞானி மாதந்தோறும் நடத்திவருகிற கேணி இலக்கிய அமர்வில் வாசித்த “ நாம் ஏன் இப்படி இருக்கிறோம் ” என்கிற கவிதையை நண்பர்.பத்ரி சேஷாத்ரியின் பதிவில் (http://www.badriseshadri.in/2012/07/blog-post.html ) காணொளியாகக் காணநேர்ந்தபோது இனம்புரியாத ஒரு உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டேன். ஒரு நாளில் ஒரு மனிதனின் நித்தியப்படி கடமைகளாக நான் நினைத்துக் கொண்டிருக்கிற அத்தனை சம்பவங்களையுமே கேள்விகளாக்கி, ஏன் இப்படி என்று கேட்பதன்மூலம் நம்மை நோக்கிய ஒரு சுயவிமர்சனத்தின் தேவையை நமக்கு உணர்த்துகிறார்.        நாம் என்னவெல்லாம் செய்யக்கிடக்க, உண்மையிலேயே நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று அறியவரும்போது, ஒரு திடுக்கிடலைத் தவிர்க்க முடியவில்லை. ஒரே ஒருமுறை மட்டுமே கவிதையைக்கேட்டேன், அதன் கூடவே பயணித்தேன், அதன்பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருக்கிறேன். கொஞ்சம் மிகைப்படுத்தப் பட்டதாகத் தோன்றலாம்.        பயண அவசரத்தில் பாதையின் குறுக்கே வந்துவிட்ட நாய்க்குட்டியை வண்டியேற்றிக் கொன்றுவிட்ட குற்றவுணர்ச்சி, அன்றைய நாளின் எல்லா வேலைகளையும் பாதித்து விடுகிறதுதானே. இங்கு நாய்க்கு

சிக்மண்ட் ஃப்ராய்டும், செல்லுலாய்ட் அழகும்.

படம்
          நண்பன் ரஃபீக் அழைத்தது ஒரு தேவலோக விழாவை பைசா செலவில்லாமல் பார்க்க அனுமதிக்கும் அனுமதிச்சீட்டைத்தருவதற்காக. அந்த விழாவிற்கு ஃபிலிம்ஃபேர் விருது வழ்ங்கும் விழா என்று பெயர். கிடைத்த இரண்டு அனுமதிச் சீட்டில் மூன்று பேர் நுழைய எனக்குத்தெரிந்த அத்தனை வித்தைகளையும் பயன்படுத்தி ( அங்க ஒருத்தர் ஃபேமிலியோட நின்னு அழுதுக்கிட்டிருக்கார் பார்) உள்ளே போனபோது, சீட்டில் இருந்த பேரைப்படித்துவிட்டு ஒரு உதவியாள இளைஞன் ஆர் யூ வசண்ட்டபாலன்? என்றதற்கு ஒரு வினாடி புளகாங்கித்து, ஹி..ஹி.. ஐம் ஹிஸ் அசிஸ்டண்ட் என்று சமாளித்தேன்.    செல்லுலாய்ட் உலகம் பிரமிக்க வைக்கிறது. அதோ பாருங்க நமீதா, அட இங்க ப்ரியாமணிங்க, அய்யோ நம்ம முன் வரிசைல உக்கர்ந்திருக்கறது காவ்யாமாதவன், என்று ஏக ரகளை. விழாவை வேடிக்கை பார்க்க, பரிசு பெற, பரிசு தர என்றுவந்த மூன்றுவிதப் பெண்களும் சிலமணி நேரங்களை கண்ணாடிமுன் செலவு செய்து தங்கள் முகங்களையும் மற்ற அவயவங்களையும் தயார் செய்திருந்தது ஆண்களுக்கு கொஞ்சம் வெப்பமூட்டிக் கொண்டிருந்தது. அவர்களின் எப்போது அவிழ்ந்து விழுமோ என்று பயப்படுத்திக் கொண்டிருந்த ஆடை இதயத்துடிப்பின் கிராஃபை த