இடுகைகள்

சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அண்ணாத்த ஆடுறார்…

படம்
திந்தாக்கு தகிட திந்தாக்கு தகிட என்று குதித்துக் கும்மாளம் போடுகிறார் அண்ணாத்த, நமக்கும் உள்ளே துள்ளுகிறது, அமைதியாய் அமர்ந்து பார்க்கிறோம். வயது ஒரு பொருட்டில்லை, சொல்லப்போனால் அது நமக்குக் கொஞ்சம் கவலையளிக்கிறது. உள்ளார எப்போதும் உல்லாலா உல்லாலா என்று அவர் தொடர்ந்து பாடி ஆடி நம்மை மகிழ்விக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அவருக்கும் அந்த ஆசை இருக்கிறது என்பதை அவர் அண்ணாத்த கடைசிநாள் படப்பிடிப்பின்போது சொல்லியிருக்கிறார். உடல்நலப் பிரச்சினைகள் எதுவுமில்லையென்றால் அவரது கதாநாயகிகள் பட்டியலில் இன்னும் இரண்டுமூன்றுபேர் இடம்பெறக்கூடும். எப்படி இது சாத்தியமாகிறது என்று கொஞ்சம் யோசித்தால், இது இன்று நேற்றல்ல 40 வருட உழைப்பினால் கிடைத்த அன்பு, அங்கீகாரம், காதல். இன்றைக்கு 70 வயதுடையவர்கள் ரசிக்கிறார்கள், அது சம வயது என்பதால் இருக்கலாம், குழந்தைகள் / இளம்பெண்கள் ரசிப்பதற்கு என்ன ஃபார்முலா வைத்திருக்கிறார் என்பதுதான் புரியாத புதிர். அவரோடு கதாநாயகியாக நடித்து தற்போது வில்லியாக நடித்திருக்கும் குஷ்பு’ தனது மகள் அவரின் தீவிர விசிறி என்று சொல்லியிருப்பது ஒரு உதாரணம். தாதாசாகிப் பால்கே’ அ
படம்
வ ர்ணங்களாலாகிய ஜாதிப்பிரிவுகள் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் மக்களைப் பேணி வந்ததன் பின்னணியில் அவைகள் போட்டிருந்த விலங்குகள் நொறுக்கப்பட்டு ஜாதிகளாலாகிய சமூகம் கொஞ்சமாய் நசிந்து சமஉரிமை, சமசமூக நீதி என்று போரிட்டுப் பெற்றுக்கொண்டிருக்கும் காலமிது. சமூக அடுக்குகள் ஜாதிகள் தவிர வறுமை, வேலையின்மை, அரசியல், சூது, பெரும்பணம் இவற்றால் இன்னமும் மாறாமலிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை., அழித்தொழிக்கமுடியாத இந்த வேறுபாடுகள் தனிமனித உளவியல் சார்ந்த அம்சமேயாகும். கல்வியறிவு மறுக்கப்பட்ட ஒரு சமூகம், அடுத்த தலைமுறையையும் கற்க அனுப்பமுடியாத அவலம், எவ்வளவு உழைத்தாலும் வரும் காசு பிழைத்து வாழப்போதாது என்கிற நிலை. வட்டிக்குவிட்டு கொழுக்கும் செல்வந்தனால் அழிக்கப்படுகிற குடும்பங்கள் என்று ஒரு புறமும், அரசியலும் அதிகாரமும் இணைந்து கொடுக்கிற சமூக அந்தஸ்த்தும், பணமும்தருகிற போதை ததும்பும் திமிரான வாழ்வில் எதையுமே பணத்தால் சாதித்துவிடமுடியும் என்கிற கருத்துருவும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான சமூக வேறுபாடுகள். ஒரு சராசரியாக மாதச்சம்பளத்தை கவனத்தில்கொண்டே நாட்களை நகர்த்தும் நம் கண்களி