இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஃபுட்பால் ஃபீவர் - ஆட்டம் ஒன்று.

படம்
           பிரேஸிலின் மார்சலோவின்  கால்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய பந்து அது, அவரின் கால்கள் கட்டுப்பாடு இழந்துவிட்டபடியால் குரோஷியாவிற்காக தனது முதல் கோலைப்போடும்படியாக நேர்ந்தது அவரின் துரதிருஷ்டம். உலகின் ஆகப்பெரிய விளையாட்டுத்திருவிழா அதை நடத்துகிற பிரேஸிலின் ஒரு வீரராலேயே தவறாகத் துவக்கி வைக்கப்பட்டது. ஆட்டம் துவங்கிய 11 வது நிமிடத்தில் நிகழ்ந்த இந்த தவறுக்காக பிரேஸிலின் நெய்மர் 29வது நிமிடத்தில் ஒரு கோலடித்து பிராயச்சித்தம் தேடிக்கொண்டார். ஆனால் அதற்குச் சற்றுமுன்புதான் அவருக்கு மஞ்சள் எச்சரிக்கை அட்டை தரப்பட்டிருந்தது. ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்கள் பந்து பிரேஸிலின் வசமே இருந்தது. குரோஷியாவின் கவனம் முழுவதும் தடுப்பாட்டத்தில் இருந்தது. மிகச் சிறப்பான தடுப்பாட்டம் அது. பிரேஸிலின் படு ஆக்ரோஷமான ஆட்டதினூடே குரோஷ்யாவின் லாரன், நெய்மரின் தோள்களைப்பற்றி விளையாடவிடாமல் தடுத்ததன்மூலம் ஒரு பெனால்டிகிக் கிற்கு   வழி ஏற்படுத்திக்கொடுக்க, கொஞ்சமும் தவறாமல் அதை கோலாக்கினார் நெய்மர். அதன்பிறகான குரோஷியாவின் ஆட்டம் கொஞ்சம் சூடுபிடித்தபோதிலும், ஓரிச்’சின் ஒரு கோல் முயற்சி

• பல பெர்பாமன்சுகள, வெரைட்டியாக் குடுத்து வின்பண்ணி...

படம்
·                                           வ டிவேலு என்கிற மகாநடிகனை அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமா நகைச்சுவை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று இரண்டு வருடத்திற்கு முன்பு யாராவது யோசித்திருப்பார்களா என்ன? 90 ’ களின் ஆரம்பத்தில் போடாபோடா புண்ணாக்கு என்ற பாடலோடு தனது சினிமாக் கணக்கைத் துவங்கியவர் வைகைப்புயலாய் வடிவம் பெற்று 2011ன் அரசியல் அரங்கத்திற்குள் யாரும் அழைக்காமலேயே நுழைந்து சக்கரவியூகத்தை உடைத்து வெளிவரத்தெரியாது உள்ளே மாட்டிக்கொண்ட சோகம் நிகழ்ந்தே விட்டது.            தமிழ், தென்னிந்திய, இந்திய சினிமாக்களில் நகைச்சுவைக்கலைஞன் பலவீனனாகவே சித்தரிக்கப்படுபவன். கதாநாயகியின் தோழியான ஒரு புத்திசாலிப் பெண்ணுக்கு காதலனாக வரும் ஒரு அசடன், ரசிகர்களை கதையின் மையநீரோட்டத்திலிருந்து விலக்கி சிரிக்கவைப்பதற்காகவே படைக்கப்பட்ட ஒரு பாத்திரம். ·         அவ்வளவே!            டி.ஆர்.ராமச்சந்திரன் அதற்கு 100 சதவீதம் பொருந்துபவர். தங்கவேலுவும் தன்னுடைய பங்கிற்கு அசட்டுப்பணியாற்றினார். நாகேஷ் தன்னுடைய ஒவ்வொரு உடலசைவிலும் அதை வெளிப்படுத்தியபடி இருப்பார். நகைச்சுவைக்கலைஞனாக வந்து சம

வாக்காளன் அப்பாவி அல்ல

படம்
                எ ன்பதையே இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கின்றன. தேர்தலை திருவிழாவாகக் கொண்டாடிய இந்திய வாக்காளன் வகைதொகை இல்லாமல் யார் என்ன பேசினாலும் பெருங்கூட்டமாய்க் கூடி தனது கை தட்டல்களைப் பரிசாகத் தந்து உற்சாகப்படுத்திய வாக்காளன் ஓட்டளித்திருக்கிற விதம் அவன் உண்மையிலேயே யார் என்பதைத் தெளிவுபடுத்தி விட்டது. தொடர்ந்து தொங்கு பாராளுமன்றங்களையும், அதன் தொடர்ச்சியான பல நாடகங்களையும், பக்க விளைவான பொருளாதார நெருக்கடிகளையும் இந்தியாவுக்குத் தந்துகொண்டிருப்பதை ஒரு ஜனநாயகக் கடமையாகவே ஆற்றிவந்த இந்திய வாக்காளன் இந்தமுறை அந்த தர்ம ’ த்தை தன் உள்ளுணர்வையும் மீறி, மீறியிருக்கிறான். ஒரு தொங்கு பாராளுமன்றம் அமைவதைத் தவிர்த்ததன் மூலம் ஒரு ஆட்சியாளனை முழு சுதந்திரத்தோடு பணியாற்றுவதற்கு அனுமதியளித்திருக்கிறான். அவனுக்கு நன்றி. இனி கேள்விகள் எழுகின்றன. மதசார்பின்மையை ஒரு வலுவான ஆயுதமாகப் பயன்படுத்திய எல்லாக் கட்சிகளும் தோற்றிருப்பது, வாக்காளன் மதசார்பற்றவனாய் இருப்பதை விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறதா? அப்படியானால் எல்லா தரப்பு மக்களும் காவிக்கு வாக்களித்திருப்பது எதனால்? மதசார்பி

ஒரு அப்பாவி வாக்காளனின் புலம்பல்கள்.

படம்
வணக்கம் . மீண்டுமொருமுறை நாம் வாக்குச்சாவடிகளுக்கு “வருகைபுரிய” இருக்கிறோம். காலச்சுழற்சியில் இந்தியாவின் – சுதந்திர இந்தியாவின் – 16வது தேர்தலில் நாம் வாக்களிக்க இருக்கிறோம். நம் கைகளில் ஐந்தாண்டுகளுக்குஒருமுறை மட்டுமே தரப்படுகிற அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வாழ்க்கை அனுமதிச்சீட்டு. நாம் சில விஷயங்களை   நினைவுகொள்ளவேண்டிய தருணம் இது, ஆமாம் அது மிக அவசியமானதும்கூட. ஒரு நாட்டின் மிக அடிப்படைத்தேவைகளான கல்வி, உணவு, மருத்துவம் போன்றவற்றில் சுதந்திரத்திற்கு பின்பான இந்த 67 வருடங்களில் நமது நிலை என்ன? ஏற்றுமதியிலும், உள்கட்டமைப்பு வசதிகளிலும் நாம் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு வளர்ந்திருக்கிறோம் அல்லது தள்ளப்பட்டிருக்கிறோம்? பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் நமது முன்னேற்றம் அல்லது பின்னடைவிற்கான உண்மையான காரணிகள் என்ன? நதிநீர் இணைப்பு இதுவரை சாத்தியமாகாததன் மர்மம் என்ன?       இதற்கெல்லாம் ஒரே பதில்தான். அது, நம்முடைய எதற்கும் அசராத   ” சகிப்புத்தன்மை”. நமது சகிப்புத்தன்மையின்மேல் கட்டமைக்கப்படுகிற அரசு, அதை தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதன் காரணமாகவே இந்தக் கேள்விகளுக்கு நம