இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சப்தமில்லாச் சென்னை!!

படம்
  நிச்சயம் ஒரு கனவுதான். தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும் வாகனங்களின் அழைப்பொலிகள் , சப்தமில்லாத ஒரு நகரத்தை உங்களால் கற்பனை செய்யக்கூட அனுமதிக்கப் போவதில்லை. சென்னை, ஹாரன் ஒலிகளால் சூழப்பட்ட ஒரு நகரம் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பியபடி நகரத்தின் இண்டு இடுக்களிலும் பறந்து கொண்டிருக்கிற இரு சக்கர வாகனங்களைத் தவிர்த்துவிட்டு இந்த நகரத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. நான்கு சக்கர வாகனங்களும் விதிவிலக்கல்ல , தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஹாங் செய்தபடி செல்வதை , பெரும்பாலோர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.   இது எத்தகைய மனோநிலை , ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று கேட்டபோது கிடைத்த பதி ல் களில் ஒன்று , மன உளைச்சல் தீருவதற்காக என்பதாக இருந்தது. இந்தியர்கள் தனது மன அழுத்தத்தை ஹாங் பண்ணுவதன் மூலம் குறைத்துக் கொள்கிறார்கள் என்பது உலகத்துக்கு ஒரு ஆச்சர்யமான செய்திதான்.   இந்தியச் சாலைகள் வாகங்களுக்காக மட்டுமல்ல அது பாதசாரிகளுக்கும் , நடைபயிலுபவர்களுக்கும் , விளையாடும் குழந்தைகளுக்குமானது , எனவே விபத்தைத் தவிர்க்க ஹாங் ’ அவசியம் என்கிறது மற்றொரு தரப்பு.

வேக்சினப்போடுங்க மக்கா, வேக்சினப்போடுங்க!!

படம்
இ ந்தப்பாடல் சென்னையின் ஏழு மண்டலங்களில் உள்ள 92 வார்டுகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வசீகரமான அந்த மின்வாகங்னகள் வெவ்வேறு வண்ணங்களில் குப்பைக்கூடைகளை ஏந்தியபடி நகரை வலம் வருகின்றன, சீருடை அணிந்த அந்த வாகன ஓட்டிகள் நம்மிடமிருந்து குப்பைகளைச் சேகரித்து, அது அதற்கான கூடைகளில் சேகரிக்கிறார்கள், பின்னணியில் பாடல் ஒலித்தபடி இருக்கிறது,  ஓஹோ.. நம்ம ஊரு, செம ஜோரு,  சுத்திபாரு, சுத்தம் பாரு..  உர்பேசர் சுமீத் என்கிற ஸ்பெயின் தேசத்து திடக்கழிவு மேலாண்மை நிறுவனம், எட்டு வருட உடன்படிக்கையில் சென்னையின் திடக்கழிவுகளைக் கையாளும் பொறுப்பைக் கையிலெடுத்து ஒரு வருடம் முடிந்திருக்கிறது. அவர்களின் கார்பேஜ் ஆன் தம் என்று சொல்லப்படுவதுதான் மேலே உள்ள பாடல். குறிப்பிட்ட காலை நேரங்களில் குறிப்பிட்ட தெருக்களுக்கு பாடல் ஒலிக்க இவர்கள் வருகிறார்கள். ஒரு சில நிமிடங்களில் சேகரிக்கப்படுகிற கழிவுகள் ஒரு பொதுஇடத்தில் வைக்கப்பட்டிருக்கிற பெரிய குப்பைத் தொட்டிகளுக்கு மாற்றப் படுகின்றன. இப்படி மாற்றப்பட்ட குப்பைகள் இரவுகளில் பெரிய ட்ரக்குகளால் சேகரிக்கப்பட்டு குப்பைக்கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப் படுகின்றன.         

அண்ணாத்த ஆடுறார்…

படம்
திந்தாக்கு தகிட திந்தாக்கு தகிட என்று குதித்துக் கும்மாளம் போடுகிறார் அண்ணாத்த, நமக்கும் உள்ளே துள்ளுகிறது, அமைதியாய் அமர்ந்து பார்க்கிறோம். வயது ஒரு பொருட்டில்லை, சொல்லப்போனால் அது நமக்குக் கொஞ்சம் கவலையளிக்கிறது. உள்ளார எப்போதும் உல்லாலா உல்லாலா என்று அவர் தொடர்ந்து பாடி ஆடி நம்மை மகிழ்விக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அவருக்கும் அந்த ஆசை இருக்கிறது என்பதை அவர் அண்ணாத்த கடைசிநாள் படப்பிடிப்பின்போது சொல்லியிருக்கிறார். உடல்நலப் பிரச்சினைகள் எதுவுமில்லையென்றால் அவரது கதாநாயகிகள் பட்டியலில் இன்னும் இரண்டுமூன்றுபேர் இடம்பெறக்கூடும். எப்படி இது சாத்தியமாகிறது என்று கொஞ்சம் யோசித்தால், இது இன்று நேற்றல்ல 40 வருட உழைப்பினால் கிடைத்த அன்பு, அங்கீகாரம், காதல். இன்றைக்கு 70 வயதுடையவர்கள் ரசிக்கிறார்கள், அது சம வயது என்பதால் இருக்கலாம், குழந்தைகள் / இளம்பெண்கள் ரசிப்பதற்கு என்ன ஃபார்முலா வைத்திருக்கிறார் என்பதுதான் புரியாத புதிர். அவரோடு கதாநாயகியாக நடித்து தற்போது வில்லியாக நடித்திருக்கும் குஷ்பு’ தனது மகள் அவரின் தீவிர விசிறி என்று சொல்லியிருப்பது ஒரு உதாரணம். தாதாசாகிப் பால்கே’ அ