இடுகைகள்

மார்ச், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னைப்போல்...ஒருவர்?

படம்
  ப் ளாக்குகளில்தான் எத்தனை விதம்? நகைச்சுவை, விமர்சனம், சினிமா, விளையாட்டு, கலாட்டா,கல்வி,அறிவியல் என்று இணையப் பதிவுலகம் மிக சுவாரஸ்யமாக இயங்கி வருகிறது. இதில் அதிகம் கவனம் கொள்வது மொக்கை ’ எனப்படும் நகைச்சுவை கலாட்டாக்கள் செய்கிற தளங்களாகத்தான் இருக்கக்கூடும். சீரியஸான அரசியல் கட்டுரை, மனதைப் பிழியும் ஒரு சிறுகதை, இதமாய் ஒரு கவிதை என்று வாசித்துவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸாக நாம் தேடுவது இவைகளைத்தான். இந்த வகை ப்ளாக்குகளில் சீரியஸாகவும் இல்லாமல் காமெடியாகவும் இல்லாமல் கொஞ்சமாய், இல்லையில்லை கடுமையாய் மெனக்கெட்டு ஒரேமாதிரி தோற்றமுள்ள பிரபலங்களின் புகைப்படங்களை மட்டுமே ஒரு பதிவர் குழு- டோனி செபாஸ்டின், கார்த்திக் நாராயண், வினோத் ராமன் – உள்ளிட்ட 35 பேர் வெளியிடுகிறார்கள். மாதிரிக்கு சில..                           ப்ரியங்கா, ரேச்சல் மடோ கலைஞர், ஜெபா த ஹட்                                                                                                                                                                                                

சுனாமி ..

  உ லகில் யார் எவ்வித துன்பம் அனுபவித்தாலும், அதில் தனக்கான ஆதாயம் எவ்வளவு  என்று கணக்கிடுகிற  மானிடமனதை என்னவென்று சொல்வது?  துயரம் நிரம்பிய சுனாமி காட்சிகளைப் பார்த்து, மனம் வெதும்பி, இரங்கி, தம்மிடமுள்ள எதாவது ஒரு பொருளைக் கொடுத்து அவர்களின் துக்கத்தில் பங்குகொள்வதன்மூலம், ஒரு மன சமாதானம் அடையலாம் என்று நீங்கள் உதவிக்கரம் நீட்டினால், அதை பறித்துக்கொண்டுபோக 1000 கொடுங்கரங்கள் சுனாமி ரிலீஃப்  ஃப்ண்ட்’ என்ற் பெயரில் காத்துக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. நாம் உதவுகிற தளம் சரியானதுதானா என்று தெரிந்துகொள்ள ஒரு தளம். உங்கள் உதவிக்காக..                 http://www.charitynavigator.org/index.cfm?bay=content.view&cpid=1221

எங்கேயோ பார்த்த மயக்கம்..

படம்
பா ப்பாகே தேஹெய்ன் படா நாமு கரேகா... என்று தன்னுடைய கணக்கைத்துவங்கினார் உதித் நாராயண். நேப்பாளின் மைந்தர், தொடர்ந்து எல்லா இந்திய மொழிகளிலும் பிச்சு உதறினார். (அந்தந்த மொழியையும்) வசீகரமான குரல் அனாயாசமாய் உச்ச ஸ்தாயியை தொட்டுத்திரும்பும் நெளிவு, கீழ்க்குரலிலும் கவர்ச்சியாகப் பாடக்கூடிய அசத்தும் ஆளுமை.  காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் என்று தமிழில் எஸ்பிபியுடன் சேர்ந்து அவர் தொடங்கிய கணக்கு இன்றுவரை நீள்கிறது. காதல்பிசாசே பாட்டில் ‘பருவாயில்லை ’ என்ற தவறான உச்சரிப்பைக்கூட தமிழுலகம் ‘பரவாயில்லை ’ என்று மன்னித்து ஏற்றுக்கொண்ட்து.     எப்போதும் ஜலதோஷம் பிடித்த மாதிரியான குரலில் ரசிகர்களை வசீகரிக்கிற வித்தை தெரிந்தவர். குலுவாலிலே என்ற இவரது இரண்டாவது பாடலில் ’ நானென்ன கலைக்கிற ஆளா? ’ என்று தமிழக மக்களைப்பார்த்து ரஜினிக்காக இவர் கேட்டார் அர்த்தம் புரியாமலேயே.. இவர் என்ன கேட்கிறார் என்பது மக்களுக்கு கொஞ்சம் லேட்டாக... ஆனாலும் புரிந்தது. ’ ஏழையை தூக்கி எறியாதே, என்கிற இவரது அடுத்த பாடல் இலையை’ என்பதாக புரிந்து கொள்ளப்பட்டது இவருடைய தவறாக