ரிமோட் கண்ட்ரோல்




சேனல்சுப்ரமணி

  • காலையில கடவுள்வணக்கம் ரொம்ப முக்கியம்டா சுப்ரமணிண்ணு நம்ம தெக்குத்தெரு திண்ணவீட்டு ஆச்சி சொல்லுவாக, அஞ்சறைக்கெல்லாம் ‘மலர்போல மலர்கின்ற மனம்வேண்டும்தாயேண்ணு ஆரம்பிச்சுருதான் விஜய்யில, ஏழறவர பக்தித்திருவிழா, வீடுதேடிவருவான் விட்டலன், பாரதக்கதைகள்னு நல்ல ஆரம்பந்தான். கேக்கதுக்குச் சொகமாத்தான் இருக்கு, கதைக்குள்ள இத்தனகதயா?ண்ணு ஆச்சர்யப்பட்டான் சொக்கு. கேக்கதுக்கே நமக்கு இப்படியிருக்கே, அதெல்லாம் எழுதிவச்சுருக்காவளே, அவுகளுக்கு எப்படி இருந்திருக்கும்ணேன் நான். என்னசொல்லுதிய, அட கண்ணன், ராமன்லாம் இருக்காவ அல்லது இல்ல, ஆனா அதெயெல்லாம் ஒரு கதையா யோசிச்சு நம்ம பயலுவளுக்கு படிக்கதுக்கு கொடுக்கணும்னு தோணுச்சுபாத்தியளா, அதச் சொல்லணும்.




  •  இந்தவாரம் பேர்கிரில்ஸு ஒரு பூச்சிய திண்ணாரு, நல்ல பெரிய பூச்சி, ஏகப்பட்ட காலுவளும், கொடுக்குமா இருந்திச்சி. கொடுக்கக்கடிச்சு துப்பிட்டு முகத்தச் சுளிச்சுகிட்டே சாப்ட்டு முடிச்சாரு. ‘இது பயங்கரமா நாருதுண்ணு சொல்லிக்கிட்டெ திண்ண அவரோட மனசு அப்போ என்ன நெனைச்சிருக்கும்ணு யோசன பண்ணேன். காடுகரைகள்ல, மக்கமனுஷங்க இல்லாத இடத்துல தனியா மாட்டிக்கிட்டா எப்படி தப்பிக்கணும்னு சொல்லித்தாராரு, திருநவேலியத்தாண்டாத(நான் என்னச் சொல்லுதேன்) நமக்கு இல்ல, பலநாடுகள்ல வாழற ராணுவவீரங்களுக்கு இந்தச்சேதி ரொம்ப உபயோகப்படும்னு சொல்லுதாங்க. அதுக்கு அவருகொடுக்குற வில ரொம்ப அதிகம்தான்ணு தோணும். ஆகாசத்துல இருந்து குதிக்கம்போது, பாராச்சூட்ட அறுத்துவிடறது, முதலைக நிறைஞ்சிருக்கிற ஏரில குதிக்கிறது, கொதிச்சுகிட்டிருக்க எரிமலமேல நடந்துபோறதுண்ணு எல்லாமே சாவோடமொகத்த கிட்டத்துல பாக்கறமாரித்தான். எனக்கு ஸ்டீவ் இர்வினோட ஞாபகம்வாறத தடுக்கமுடியல. 
  •  
  •                                   
  •  
  •   செஃப் ஜேக்கப்முந்தாநாள் ராத்திரி இறந்துபோனார். அவரோட சமையல் நிகழ்ச்சிகள பொம்பளைங்க மட்டுமில்லாம ஆம்பளைங்களும் ரசிச்சுப் பாத்ததுக்கு காரணம் அவரோட ஸ்டைல் மட்டுமில்ல அழகான நீரோடயான பேச்சுந்தான். நான் கடைசியாப் பாத்தப்போ கடற்கரையோரம் ஒரு பாறையில ஸ்டவ்வ வச்சு ‘கணவாய் ஃபிஷ் கார்னெட்ண்ணுசொல்லி ஒரு அயிட்டம் செஞ்சு காட்டிக்கிட்டிருந்தார். அங்க மட்டுமில்ல போட்ல வச்சு, ரோட்டுல வச்சு, அருவிக்கரயில வச்சுண்ணு பல எடங்கள்ல அவரு வெரைட்டியா செஞ்சுகாமிக்கிற ஸ்டைலு இருக்கே, நமக்கு ரொம்ப புடிக்கும். தனிமனுஷனாவும் சமுதாயத்துல பசிய ஒழிக்கப்போராடணும்னு ஒரு கொள்க வச்சிருந்திருக்கார், என்ன பண்ணுதது, விதியப்புடிக்க முடியாது.
  •  

·        

  •  சன்னுல ஞாயித்துக்கெழம காலைல நம்ம சிரிப்பழகன் மதன்பாப்கொடுக்கற பல்சுவை நிகழ்ச்சி “பாட்டோட கத கேளு” நல்ல பொழுதுபோக்கு. முதல்ல ஒரு பாடகரோட பாட்டு, அப்புறம் கொஞ்சம் சிரிப்பு, கடைசியா பிரபலம் ஒருத்தரோட பேட்டின்ணு கலவயா கொடுக்காரு. அவரு சிரிக்கிறத கொறச்சுக்கிட்டார்னா நம்ம நல்லா சிரிக்கலாம். சமீபத்துல மனோ அப்புறம் பி.பி.ஸ்ரீனிவாஸ் ரெண்டுபேரோட பேட்டியும் நல்லா வந்திருந்திச்சி.
  •  

·        

  •  தொலைக்காட்சி தோன்றுன நாள்ளயிருந்து இண்ணேவரைக்கும் ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து நடக்குதுண்ணா அது பிஎச் அப்துல்ஹமீது நடத்துத பாட்டுக்குப்பாட்டுதான். அதே ஆர்வம் கொஞ்சங்கூடக்குறையாம தொடர்ந்து அவர் நடத்திகிட்டு வர்றதுக்காவேண்டியே கண்டிப்பா பாக்கணும். ஒருகாலத்துல சிலோன் ரேடியோவுல நடத்தும்போது இருந்த கண்டிப்பு இப்போஇல்ல, நெறைய விட்டுத்தான் புடிக்கிறாரு அனாலும் நம்ம ஆளுக அஞ்சு பாட்டத்தாண்ட மாட்டங்காக, என்ன பண்றது? நம்ம தமிழ்சினிமாப் பாடல்கள் அத்தனயயும் அதன் முழுவெவரத்தோடு தெரிஞ்சு வச்சிருக்கிற ஒரே ஆத்மா, அவர்தான். நாம அவர சரியா பயன்படுத்திக்கலயோ?

என்ன பாக்கிறிய எனக்குத்தெரிஞ்சத, ஏன் பாஷயில எழுதிருக்கேன். புடிச்சிருந்தா கீழ உள்ள பொட்டியில ஒரு ஓட்டப் போட்டுருங்க, புடிக்கலயா ஏதாவது திட்டணும்னாலும் கீழ தனியா ஒரு பொட்டி இருக்கு அதில திட்டலாம். அடுத்த செவ்வா வாறேன். வர்ட்டா!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சுவரோடு ஒட்டிய சென்னை

அண்ணே, விஜயகாந்த் அண்ணே!