சும்மா இரு, சொல்லற..

சுட்டுவிடக்கூடும் சில சொற்கள்..
இதமாய் இதயம் தடவும், முகம் மலர்த்தி
புன்னகைக்கும், ‘திடும்’ மென
கோரமுகம் காட்டி மனது குலைக்கும்,
எந்த விளைவுகளுமற்று பொருளற்றதாயும் சில,
நிறுத்தவோ, சுருக்கிக் குறுக்கிவிடவோ
முடியாததாயும்  தொடர்கின்றன பல வேளைகளில்
சொற்கள்... சிக்கல்களற்ற எளிமையோடு, 
வியக்கும்படியான உயரத்தில்
எப்போதும், மௌனம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சுவரோடு ஒட்டிய சென்னை

அண்ணே, விஜயகாந்த் அண்ணே!