இடுகைகள்

வாக்காளன் அப்பாவி அல்ல

படம்
                எ ன்பதையே இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கின்றன. தேர்தலை திருவிழாவாகக் கொண்டாடிய இந்திய வாக்காளன் வகைதொகை இல்லாமல் யார் என்ன பேசினாலும் பெருங்கூட்டமாய்க் கூடி தனது கை தட்டல்களைப் பரிசாகத் தந்து உற்சாகப்படுத்திய வாக்காளன் ஓட்டளித்திருக்கிற விதம் அவன் உண்மையிலேயே யார் என்பதைத் தெளிவுபடுத்தி விட்டது. தொடர்ந்து தொங்கு பாராளுமன்றங்களையும், அதன் தொடர்ச்சியான பல நாடகங்களையும், பக்க விளைவான பொருளாதார நெருக்கடிகளையும் இந்தியாவுக்குத் தந்துகொண்டிருப்பதை ஒரு ஜனநாயகக் கடமையாகவே ஆற்றிவந்த இந்திய வாக்காளன் இந்தமுறை அந்த தர்ம ’ த்தை தன் உள்ளுணர்வையும் மீறி, மீறியிருக்கிறான். ஒரு தொங்கு பாராளுமன்றம் அமைவதைத் தவிர்த்ததன் மூலம் ஒரு ஆட்சியாளனை முழு சுதந்திரத்தோடு பணியாற்றுவதற்கு அனுமதியளித்திருக்கிறான். அவனுக்கு நன்றி. இனி கேள்விகள் எழுகின்றன. மதசார்பின்மையை ஒரு வலுவான ஆயுதமாகப் பயன்படுத்திய எல்லாக் கட்சிகளும் தோற்றிருப்பது, வாக்காளன் மதசார்பற்றவனாய் இருப்பதை விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறதா? அப்படியானால் எல்லா தரப்பு மக்களும் காவிக்கு வாக்களித்திருப்பது எதனால்? மதசார்பி