கடவுளின் கைகள்
தருமமிகு சென்னையில் கத்திப்பாரா சந்திப்பில் விரைவுவண்டியில் வந்து இறங்கப்போகிற நண்பர் ஒருவருக்காகக் காத்திருக்க நேர்ந்தது. சாலையில் நெருக்கடி இல்லாத காலைப் பொழுது, இலேசான காற்றும், அப்பொதுதான் பரவத்தொடங்கியிருக்கும் வெளிச்சமும் மனதை எங்கோ இழுத்துச்சென்று கொண்டிருந்தது. மேகங்கள் மயிலைப்போலத் தோற்றங் கொண்டு பின் குயிலாக மாறிக்கொண்டிருந்தது. (டேய்..டேய்..டேய்..) சரி பாரதிதாசன் மன்னிக்கட்டும். ஒவ்வொரு பேருந்தும் வந்து நிற்கையில் ஓட்டமாக ஓடி பயணிகளை இறங்கவிடாமல் வழிமறித்து, பின்னாலேயேபோய் பேரம் படிந்தால் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பறப்பதும், மீதிப்பேர் அடுத்த பேருந்து வரும்வரை அரட்டையைத் தொடருவதுமாக ஜாலியாய் ஒரு ரகளை நடத்திக்கொண்டிருந்தார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள். எவ்வளவு கெஞ்சியும் மறுத்து பிடிவாதமாக பஸ்ஸிலேயே போவேன் என்று காத்திருக்கும் கல்லுளிமங்கர்களின் உடல்மொழியை அபிநயித்து, கிண்டல் வேறு. எல்லாவற்றையும் பார்த்து சிரித்தவாறே காத்திருந்தபோது, வேகமாய் வந்த ஒரு பேருந்து நடைமேடைக்கு மிக அருகில் உரசினாற்போல நின்றது, அவசரமாய் அதிலிருந்து தலையை வெளியே நீட்டிய நடத்துனர், “ ஏய