இடுகைகள்

சுவரோடு ஒட்டிய சென்னை

படம்
சென்னையையும் சுவரொட்டியையும் நீங்கள் பிரித்துப்பார்க்க நினைத்தால் அது மிகச்சிரமமான காரியம்தான். சென்னைச் சுவர்களோடு பிரிக்கமுடியாத பந்தம் கொண்டிருப்பவை ஏசியன், நெரோலாக், பெர்ஜெர்களைவிடவும் இந்த சுவரொட்டிகள்தான். கொஞ்சநாட்களுக்கு முன்னதாக ஒரு சினிமா விளம்பரம் உங்களுக்கு 21 கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்   என்று கேட்டுக் கடுப்படித்தது. இப்படிப் பொத்தாம் பொதுவாக ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தி அப்புறம் சப் ’ பென்று முடிப்பது ஒரு விளம்பர உத்தி. புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா, சண்டேண்ணா ரெண்டு என்று அவ்வப்போது பொதுப்பார்வையை தங்கள் பக்கம் திருப்பி பலனடைந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் தொலைகாட்சித் தொடர்களுக்கும் அதுமாதிரி ஒரு திடீர் திருப்ப ’ விளம்பரங்களை சுவரொட்டிகள் மூலம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியதில் சரவணன் மீனாட்சிக்கு பெரும் பங்கு உண்டு. என் நண்பனின் 8 வயது மகள் சரவணன்மீனாட்சி திருமணம் ஒளிபரப்பான அன்று 11 மணிவரை விழித்திருந்து பார்த்துவிட்டு அயர்ச்சியாய் சொன்ன வார்த்தை “ நல்லவேளைப்பா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது, இனிமே பிரச்சினை இல்ல ”   தமிழகத்தின் பெரும்பாலான மனிதர்கூடுமிடங்களிலெல்

கொஞ்சம் கவனமாய்த்தான் வாழவேண்டியிருக்கிறது, வாழ்க்கையை!

படம்
 அவரோடு பேசிக்கொண்டிருந்ததை இவர் பார்த்தபிறகு       அவ்வளவாய்ப் பேசுவதில்லை இவர் என்னோடு,         இதுவரை விலகியே இருந்த மற்றொருவர் இப்போது            என் நெருக்கமான நண்பர், மற்றவர் நெருங்கியது               தெரிந்ததும், அவர் கொஞ்சமாய் விலகிப்போனார்.                அவர் விலகியதை அறிந்து இவர் மீண்டும்                 பேசத்துவங்கினார். பிறிதொருவர் இப்போது அவருக்கு           நண்பரானார், இவரும் மற்றவரும் பேசிக்கொள்ளத்        துவங்கிய நாளிலிருந்து, நான் இருவரோடும்                   இப்பொது பேசுவதில்லை .

மனிதனை நோக்கிய மனுஷ்ய’னின் கேள்வி. நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?

படம்
      மனுஷ்யபுத்திரன், ஞானி மாதந்தோறும் நடத்திவருகிற கேணி இலக்கிய அமர்வில் வாசித்த “ நாம் ஏன் இப்படி இருக்கிறோம் ” என்கிற கவிதையை நண்பர்.பத்ரி சேஷாத்ரியின் பதிவில் (http://www.badriseshadri.in/2012/07/blog-post.html ) காணொளியாகக் காணநேர்ந்தபோது இனம்புரியாத ஒரு உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டேன். ஒரு நாளில் ஒரு மனிதனின் நித்தியப்படி கடமைகளாக நான் நினைத்துக் கொண்டிருக்கிற அத்தனை சம்பவங்களையுமே கேள்விகளாக்கி, ஏன் இப்படி என்று கேட்பதன்மூலம் நம்மை நோக்கிய ஒரு சுயவிமர்சனத்தின் தேவையை நமக்கு உணர்த்துகிறார்.        நாம் என்னவெல்லாம் செய்யக்கிடக்க, உண்மையிலேயே நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று அறியவரும்போது, ஒரு திடுக்கிடலைத் தவிர்க்க முடியவில்லை. ஒரே ஒருமுறை மட்டுமே கவிதையைக்கேட்டேன், அதன் கூடவே பயணித்தேன், அதன்பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருக்கிறேன். கொஞ்சம் மிகைப்படுத்தப் பட்டதாகத் தோன்றலாம்.        பயண அவசரத்தில் பாதையின் குறுக்கே வந்துவிட்ட நாய்க்குட்டியை வண்டியேற்றிக் கொன்றுவிட்ட குற்றவுணர்ச்சி, அன்றைய நாளின் எல்லா வேலைகளையும் பாதித்து விடுகிறதுதானே. இங்கு நாய்க்கு

சிக்மண்ட் ஃப்ராய்டும், செல்லுலாய்ட் அழகும்.

படம்
          நண்பன் ரஃபீக் அழைத்தது ஒரு தேவலோக விழாவை பைசா செலவில்லாமல் பார்க்க அனுமதிக்கும் அனுமதிச்சீட்டைத்தருவதற்காக. அந்த விழாவிற்கு ஃபிலிம்ஃபேர் விருது வழ்ங்கும் விழா என்று பெயர். கிடைத்த இரண்டு அனுமதிச் சீட்டில் மூன்று பேர் நுழைய எனக்குத்தெரிந்த அத்தனை வித்தைகளையும் பயன்படுத்தி ( அங்க ஒருத்தர் ஃபேமிலியோட நின்னு அழுதுக்கிட்டிருக்கார் பார்) உள்ளே போனபோது, சீட்டில் இருந்த பேரைப்படித்துவிட்டு ஒரு உதவியாள இளைஞன் ஆர் யூ வசண்ட்டபாலன்? என்றதற்கு ஒரு வினாடி புளகாங்கித்து, ஹி..ஹி.. ஐம் ஹிஸ் அசிஸ்டண்ட் என்று சமாளித்தேன்.    செல்லுலாய்ட் உலகம் பிரமிக்க வைக்கிறது. அதோ பாருங்க நமீதா, அட இங்க ப்ரியாமணிங்க, அய்யோ நம்ம முன் வரிசைல உக்கர்ந்திருக்கறது காவ்யாமாதவன், என்று ஏக ரகளை. விழாவை வேடிக்கை பார்க்க, பரிசு பெற, பரிசு தர என்றுவந்த மூன்றுவிதப் பெண்களும் சிலமணி நேரங்களை கண்ணாடிமுன் செலவு செய்து தங்கள் முகங்களையும் மற்ற அவயவங்களையும் தயார் செய்திருந்தது ஆண்களுக்கு கொஞ்சம் வெப்பமூட்டிக் கொண்டிருந்தது. அவர்களின் எப்போது அவிழ்ந்து விழுமோ என்று பயப்படுத்திக் கொண்டிருந்த ஆடை இதயத்துடிப்பின் கிராஃபை த

கடவுளின் கைகள்

படம்
தருமமிகு சென்னையில் கத்திப்பாரா சந்திப்பில் விரைவுவண்டியில் வந்து இறங்கப்போகிற நண்பர் ஒருவருக்காகக் காத்திருக்க நேர்ந்தது. சாலையில் நெருக்கடி இல்லாத காலைப் பொழுது, இலேசான காற்றும், அப்பொதுதான் பரவத்தொடங்கியிருக்கும் வெளிச்சமும் மனதை எங்கோ இழுத்துச்சென்று கொண்டிருந்தது. மேகங்கள் மயிலைப்போலத் தோற்றங் கொண்டு பின் குயிலாக மாறிக்கொண்டிருந்தது. (டேய்..டேய்..டேய்..)   சரி பாரதிதாசன் மன்னிக்கட்டும்.  ஒவ்வொரு பேருந்தும் வந்து நிற்கையில் ஓட்டமாக ஓடி பயணிகளை இறங்கவிடாமல்   வழிமறித்து, பின்னாலேயேபோய் பேரம் படிந்தால் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பறப்பதும், மீதிப்பேர் அடுத்த பேருந்து வரும்வரை அரட்டையைத் தொடருவதுமாக ஜாலியாய் ஒரு ரகளை நடத்திக்கொண்டிருந்தார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள். எவ்வளவு கெஞ்சியும் மறுத்து பிடிவாதமாக பஸ்ஸிலேயே போவேன் என்று காத்திருக்கும் கல்லுளிமங்கர்களின் உடல்மொழியை அபிநயித்து, கிண்டல் வேறு. எல்லாவற்றையும் பார்த்து சிரித்தவாறே காத்திருந்தபோது,      வேகமாய் வந்த ஒரு பேருந்து நடைமேடைக்கு மிக அருகில் உரசினாற்போல   நின்றது, அவசரமாய் அதிலிருந்து தலையை வெளியே நீட்டிய நடத்துனர், “ ஏய

அறிவை அளக்கலாம் வாங்க.

படம்
      நுண்ணறிவு எண்(IQ)  என்பது நம்முடைய அறிவின் அளவினைக் கண்டறிய என்று தரப்படுத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் ஒன்றின் மூலம் பெறப்படும் எண். உலகின் நாலாபக்கங்களிலும் சீரியஸாக ஒரு போட்டி நடந்து வருகிறது, யார் நுண்ணறிவில் அதிக எண்ணைப்பெறுகிறார்கள் என்று. சின்ன வயதில் பலப்பம் திருடி தின்றதிலிருந்து நேற்றுப் பார்த்த எம்மா ஸ்டோனின் ஸ்பைடெர்மேன் முத்தம் வரையிலும் மறக்காமலிருந்தால் உங்கள் எண் 200 ஆக இருக்கலாம். மாறாக நீங்கள் உங்கள் ஆருயிர் நண்பன் குமாரை, கிட்டு என்று அழைத்தால் அல்சைமர்ஸ் உஙகள் முதுகுக்குப்பின்னால் காத்திருக்கிறது என்று அர்த்தம். நு.எண் ஒரு அஞ்சோ, பத்தோ இருக்கலாம்.       யூகியுடன் யூகியுங்களில் (ஜெயா டிவி) விஷாலினியை அறிமுகம் செய்தார் சேது. விஷாலினி கல்லூரிக்குச் சென்று வகுப்பெடுக்கிறாள், செமினார்களில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிக்கிறாள், சிக்கலான சில மனக்கணக்குகளை சேது போட்டபோது சரியான விடைகளை கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள். MPC என்கிற மைக்ரோசாஃப்ட் ப்ரொஃபெஸனல் செர்டிஃபிகேட் பெற்றிருக்கிறாள். எல்லாப்பதில்களுக்கும் சேதுவின் புருவங்களை உயர்த்த வைத்தாள், நம்முடையதையும்த
படம்
வ ர்ணங்களாலாகிய ஜாதிப்பிரிவுகள் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் மக்களைப் பேணி வந்ததன் பின்னணியில் அவைகள் போட்டிருந்த விலங்குகள் நொறுக்கப்பட்டு ஜாதிகளாலாகிய சமூகம் கொஞ்சமாய் நசிந்து சமஉரிமை, சமசமூக நீதி என்று போரிட்டுப் பெற்றுக்கொண்டிருக்கும் காலமிது. சமூக அடுக்குகள் ஜாதிகள் தவிர வறுமை, வேலையின்மை, அரசியல், சூது, பெரும்பணம் இவற்றால் இன்னமும் மாறாமலிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை., அழித்தொழிக்கமுடியாத இந்த வேறுபாடுகள் தனிமனித உளவியல் சார்ந்த அம்சமேயாகும். கல்வியறிவு மறுக்கப்பட்ட ஒரு சமூகம், அடுத்த தலைமுறையையும் கற்க அனுப்பமுடியாத அவலம், எவ்வளவு உழைத்தாலும் வரும் காசு பிழைத்து வாழப்போதாது என்கிற நிலை. வட்டிக்குவிட்டு கொழுக்கும் செல்வந்தனால் அழிக்கப்படுகிற குடும்பங்கள் என்று ஒரு புறமும், அரசியலும் அதிகாரமும் இணைந்து கொடுக்கிற சமூக அந்தஸ்த்தும், பணமும்தருகிற போதை ததும்பும் திமிரான வாழ்வில் எதையுமே பணத்தால் சாதித்துவிடமுடியும் என்கிற கருத்துருவும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான சமூக வேறுபாடுகள். ஒரு சராசரியாக மாதச்சம்பளத்தை கவனத்தில்கொண்டே நாட்களை நகர்த்தும் நம் கண்களி